பாவம் புத்தக விமர்சனம்!

நேற்று தி ஹிந்து நாளிதழின் இணைப்புப் பகுதியில், புத்தக விமர்சனம் எப்படி தமக்கான இடத்தை இழந்துகொண்டு வருகிறது என்பது பற்றி நீண்ட கட்டுரை வந்திருக்கிறது. 1500 சொற்களில் விமர்சனங்கள் எழுதிய காலம் போய், இப்போது, 200 - 400 சொற்களில் அறிமுகங்கள் எழுதும் காலம் வந்துவிட்டது.

முழு கட்டுரை இதோ.

தமிழில் நிலைமை இவ்வளவு மோசமாகவில்லை என்றே நினைக்கிறேன். தினமணி, தினமலர், தினதந்தி போன்ற நாளிதழ்களில் இருந்து, எல்லா சிறு பத்திரிகைகளிலும் புத்தக விமர்சனத்துக்கு என்று சில பக்கங்கள் ஒதுக்கப்படுவதைப் பார்க்கிறேன்.

ஆனால், எனக்கு இந்தத் தமிழ் விமர்சனங்களில் உள்ள ஒரு குறை மிகவும் எரிச்சல் தருவது. சட்டென விமர்சகருக்குக் கொம்பு முளைத்துவிடும். விமர்சகர் ஒரு ஐவரி டவரில் போய் உட்கார்ந்துகொள்வார். நல்ல வார்த்தை நாலு அவரிடம் இருந்து வாங்குவது, முத்து குளிப்பது மாதிரி ஆகிவிடும்.

அமுதசுரபி, தமிழ் சிஃபி டாட் காம் ஆகிய இடங்களில் எழுதும் வெங்கட் சாமிநாதனின் விமர்சனங்களில் அன்னியோன்யம் இருப்பதை உணர்கிறேன். படிக்கும்போதே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

தமிழ் எழுத்தாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு!

நேற்று தமிழக சட்டசபையில் தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் இடம்பெற்றன. அதில் கீழ்கண்ட அறிவிப்புகளை பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

1. மூத்த தமிழறிஞர்களுக்கு ரூ. 500 த்திலிருந்து, ரூ. 1000 மாக உதவித் தொகை அதிகரிப்பு.
2. ஒவ்வொரு ஆண்டும் நூறு படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ உதவி பெறும் வகையில் ஒரு லட்ச ரூபாய்க்கான காப்பீடு.
3. பிற மாநிலங்களில் தமிழை மொழிப்பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கு, பரிசுத் தொகை.
4. நட்சத்திர ஓட்டல் அறைகளில் திருக்குறள் வைக்க, ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கீடு.
5. தமிழறிஞர்கள பற்றி டாக்குமெண்டரி எடுக்க 10 லட்ச ஒதுக்கீடு.
6. தமிழ் படைப்பாளிகள் யார் யார் (Who's Who)வெளியிட ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு.
7. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் மேலும் 7 பகுதிகள் அச்சிட்டு வெளியிட நிதி ஒதுக்கீடு.

முழு விவரங்கள் இங்கே. இங்கே.

ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனை 15 % வளருகிறது

இந்தியப் பதிப்புத் தொழிலில், புத்தக விற்பனை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவிகிதம் வளர்ச்சி பெறுகிறதாம். இந்த வளர்ச்சி அடுத்த பத்தாண்டுகள் தொடரும் என்கிறார்கள். அதனால், பல வெளிநாட்டுப் பதிப்பகங்கள், தொடர்ந்து இந்தியாவில் தமது கிளையைத் தொடங்கியவண்ணம் உள்ளன. கார்டியனில் வந்துள்ள முழு கட்டுரை இது.

இந்தப் பகுதியைப் பாருங்கள்:

UK publishers' Indian colleagues have spent this month preparing for a world showcase of their books as guest of honour at this year's Frankfurt book fair in October. India was the first country to be invited in this way 20 years ago, and will this year be the first to be invited back. The theme, "Today's India", reflects the rapid changes and growth in Indian publishing and bookselling over the past two decades. Estimates suggest that sales of books are up 15% annually, a rate of growth that is expected to continue for the next 10 years. Buoyancy in the books business reflects the country's growing prosperity, as well as the gradual expansion of book retail outlets across the nation. All this, combined with the well-documented rise of the young, urban, educated and English-speaking Indian middle class, makes Indian publishing an especially interesting investment prospect. Random House is the most recent of the multinational publishers to set up a local house there. Only this month, Chiki Sarkar, previously a commissioning editor at Bloomsbury in London, has moved to New Delhi as editor-in-chief at Random House India. The company's first novel, Manju Kapur's Home, a story of family life across three generations of Delhi shopkeepers, is just out. At other, more established Indian operations (such as HarperCollins India, Oxford University Press India, Penguin Books India and Picador India), big names such as Vikram Seth and Salman Rushdie are being joined by a new generation of writers attracting big advances and international acclaim. As Thomas Abraham, the boss of Penguin Books India, says: "India has become significant on the world stage both in terms of being a key emerging market as well as a sourcing area for exciting new writing. I think we're going beyond the era when Indian writing was positioned primarily as exotica."

ஐயப்ப பணிக்கர் மறைவு

மூத்த மலையாளக் கவிஞரும், பேராசிரியரும், விமர்சகருமான ஐயப்ப பணிக்கர் புதன்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் இயற்கை எய்தினார். அவருடைய பல கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, பல சிறு பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன. விருட்சம் பதிப்பகம் அவருடைய கவிதை நூல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக ஞாபகம்.

செய்தி இதோ.

அவர் கவிதைகளின் சுட்டிகளை விரைவில் எடுத்துப் போடுகிறேன்.

வெங்கடேஷ்.

ஜாமியா மிலியா நூல்கள் டிஜிட்டைஸ் செய்யப்படுகின்றன

தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணற்ற அரிய புத்தகங்களும், ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் டிஜிட்டைஸ் செய்யப்பட்டு சேமிக்கப்பட இருக்கின்றன. சிடாக் நிறுவனத்தோடு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

செய்தி இதோ.

எப்போது இந்த புத்தகங்கள் மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும், எப்போது இத்திட்டம் நிறைவு பெறும் போன்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் தங்கள் நூலகங்களை இப்படி டிஜிட்டைஸ் செய்து எதிர்காலத்துக்குச் சேமித்து வைக்க முன்வருவதே நல்ல செய்திதான்.

வெங்கடேஷ்.

பிரிட்டிஷ் கவுன்சில்களில் இந்தியப் புத்தகங்கள்

உலகமெங்கும் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் இனி அதிகம் இந்தியப் புத்தகங்கள் வாங்கி வைக்கப்படும் என்று அதன் இலக்கியப் பகுதி டைரக்டர் தெரிவித்திருக்கிறார். கேட்பதற்கே சுவாசியமாக இருக்கிறது.

இந்தியாவும் சீனாவும்தான் இப்போது உலகெங்கும் செல்லப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இங்கே உள்ள மிகப் பெரிய சந்தை, எல்லார் கண்ணையும் கவனத்தையும் கவர்கிறது. எப்படியாவது, இந்த மக்களின் நாடித் துடிப்பைப் பிடித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற அவா எல்லா தொழில் செய்ய விரும்பும் நாடுகளையும் ஆக்கிரமித்திருக்கிறது. இலக்கியம்தான் அதற்கு அடிப்படை. எழுத்துதான் உபகரணம்.

நம் மேல் குவியும் கவனம் பற்றி நாமும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

வெங்கடேஷ்.

நூலகம் டாட் நெட்

இலங்கை எழுத்துக்கள் மீது எனக்கொரு ஈடுபாடு உண்டு. என் சேகரிப்புகளில் இலங்கை புத்தகங்களை ஓரளவுக்குத் திரட்டி வைத்திருக்கிறேன். நூலகம் வலைதளம் வந்தபின் உண்மையில் என் வாசிப்பு எவ்வளவு போதாமல் இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.

நான் பெரிதும் மதிக்கும் பத்மநாப ஐயர், நண்பர்கள் ஈழநாதன், மயூரன், மதி கந்தசாமி ஆகியோர் இணைந்து இந்த வலைதளத்தை நடத்துகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்.

தொடர்ந்து ஒவ்வொரு நூலாகப் படிக்கிறேன். இதில் என்னை அதிகம் பாதித்தது, கோவிந்தனின் புதியதோர் உலகம். பல முறை இந்த நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நூலாக வாங்க முடிந்ததில்லை.

மிகத் தரமாக எழுதப்பட்ட நாவல். பரிசல் செந்தில்நாதன், மீண்டும் இந்த நாவலை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். நூலாகவும் வாங்க வேண்டும்.

வெங்கடேஷ்.

கதா, துலிக்காவின் சிறுவர் நூல்கள்

கதாவும் துலிக்காவும் நிறைய சிறுவர் நூல்களை வெளியிட்டு வருகின்றன. மிக அழகான வண்ணப்படங்கள் நிறைந்த புத்தகங்கள் அவை. சமீபத்தில் தி பிசினஸ்லைன் நாளிதழில் அவர்களது புத்தகங்கள் பற்றி வந்த கட்டுரை இது.

குறிப்பாக இவ்விரு பதிப்பகங்களும் இந்திய வாய்மொழிக் கதைகளை வெளியிடுவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இந்த நூல்கள் பதிப்பிக்கபடுவதால், ஓரளவுக்கு விலையும் குறைவாகவே இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் உண்மை. பல வெளிநாட்டுப் பதிப்பங்கள் இங்கே இந்தியாவில் புத்தகங்கள் விற்கும்போது, நினைத்தே பார்க்க முடியாத விற்பனைக் கழிவை விற்பனையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். புத்தக விலையை எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள், ஆனால் எனக்கான விற்பனைக் கழிவு மட்டும் குறையாமல் இருக்க வேண்டும் என்று பல புத்தக விற்பனை நிலையங்கள் நினைக்கின்றன. அதனாலேயே பல வெளிநாட்டுச் சிறுவர் புத்தகங்கள் இங்கே உள்ள கடைகளில் சுலபமாகக் கிடைக்கின்றன.

இதையும் மீறி, தங்களால் சிறுவர் மார்க்கெட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று இவ்விரு பதிப்பகங்களும் முனைவது நல்ல அறிகுறி.

செல்போனில் புத்தக விவரம்

ஆக்ஸ்போடு புக்ஸ்டோரும், மொபைல் 365 என்ற நிறுவனமும் இணைந்து, செல்போனிலேயே லேட்டஸ்ட் புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வழி செய்திருக்கிறார்கள். கதை, கதையல்லாதது, எல்லாரும் வாசிப்பது, எடிட்டர்ஸ் சாய்ஸ், ஆக்ஸ்போர்டு பரிந்துரைகள் என்று பல்வேறு வகைகளில் இந்தச் செய்திகள் செல்போனில் கிடைக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கீவேர்டை 6365 என்ற ஷார்ட்கோடுக்கு அனுப்ப வேண்டும்.

முழு கீவேர்டு லிஸ்டு இங்கே இருக்கிறது.

நான் லேட்டஸ்டு கதைப் புத்தகங்களைத் தெரிந்து கொள்ள ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கழித்து பதில் வந்தது.

மேலும் இந்த கீவேர்டுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொளவது என்று தெரியவில்லை. எளிமையாக இல்லை. பழக பழக ஞாபகம் வந்துவிடுமோ?

ஆனால், செல்போனில் புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் சுவாரசியாக இருக்கிறது.

வெங்கடேஷ்

வணக்கம், வருக

ஆடிய கால்களும், எழுதிய கைகளும் எப்போதும் சும்மா இருக்காது. ஏற்கனவே சிஃபிராயன், நேசமுடன்வலைப்பதிவுகளைத் தொடர்ந்து நட்த்திவந்தேன். வழக்கம் போல் ஒரு பிரேக். இப்போது அடுத்த இன்னிங்க்ஸ்.

எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம் வேண்டி இருக்கிறது. நேசமுடன் மடல் இதழும் / வலைப்பதிவும் அப்படிப்பட்ட ஒரு மனத்தேவையை ஒட்டியே பிறந்தது.

இந்த முறை, புத்தகங்கள், பதிப்புத் தொழில். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தத் தொழிலிலேயே இருந்து வந்திருக்கிறேன். பல்வேறு முன்னேற்றங்களைத் தொடர்ந்து பார்த்தும் வருகிறேன். ஆங்கில பதிப்புத் தொழில் என்று மட்டும் இல்லாமல், தமிழிலும் இந்த முன்னேற்றங்கள் பெருமளவு தெரியத் தொடங்கிவிட்டது.

இதையெல்லாம் பதிவு செய்வதும், பேசுவதும் ஒரு அவசியமாகிறது. இந்த விகடன் பிரசுரம் பதிவில் அதைத்தான் செய்ய இருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் குறைந்த்து இரண்டு மூன்று பதிவுகளாவது போட விருப்பம்.

தொடர்ந்து படியுங்கள். கருத்து தெரிவியுங்கள்.

நேசமுடன்
வெங்கடேஷ்

இது சோதனை பதிவு..

அன்புநிறை நண்பர்களே..

இது சோதனைப் பதிவு..

வெங்கடேஷ்.